நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், திண்டுக்கல்லில் பிறந்த கவிதைகல். வேளாண் துறையில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். பன்முக ஆற்றலாளர். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திருச்சி சந்தர் அவர்கள் நடத்திய கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை பாடியவர். பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு எதிரணியில் வாதிட்டவர். மதுரையில் இலக்கிய விழாக்களில் தனிமுத்திரை பதித்து வருபவர்.
இவர் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், குறும்பட நடிகர், பின்னணிக் குரலாளர், கதாசிரியர், கட்டுரையாளர் ஆகிய பன்முகத் திறனோடு திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.